மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 21 பேர் கைது

X
Komarapalayam King 24x7 |24 May 2025 7:06 PM ISTமாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ராஜம் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். காவிரி ஆறு நச்சுக்கழிவுகளால் மாசுபடுவதை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என்ற கோஷத்தை முன் வைத்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனுமதி இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதால், ஆர்ப்பாட்டம் நடத்திய 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
