ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் - ஆட்சியர்

ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும்  கூட்டம் - ஆட்சியர்
X
தூத்துக்குடியில் வருகிற 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
தூத்துக்குடியில் வருகிற 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”  21.08.2025  அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.   எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க..இளம்பகவத்,   செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story