மாவட்டத்தில் 22ம் தேதி வரை சிறப்பு முகாம்

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு ஜன., மாதம் கோமாரி தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது. கனியாமூரில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து கூறியதாவது; கள்ளக்குறிச்சி கோட்டத்தில், 1,87,600, திருக்கோவிலுார் கோட்டத்தில் 1,10,400 என மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. கள்ளக்குறிச்சி கால்நடை பெருமருத்துவமனை, 2 கால்நடை மருத்துவமனைகள், 54 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், 6 ஆம்புலன்ஸ்கள் மூலமாகவும், வரும் 22ம் தேதி வரை கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட இணை இயக்குநர் விஷ்ணு கந்தன் தலைமையில், துணை இயக்குநர் நாசர், உதவி இயக்குநர் சுதா கந்தசாமி, மருத்துவர் கந்தசாமி ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
Next Story

