கோவையில் ரூ.22 லட்சம் பறிமுதல் !

X
கோவை மதுக்கரை அருகே எட்டிமடை சோதனைச் சாவடியில் காவல்துறை வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் பழைய நகைகள் விற்று விட்டு, பணத்துடன் கேரளா திரும்பியதாக பாலக்காடு மாவட்ட நகைக்கடை உரிமையாளர் ராம்தாஸ் கூறியுள்ளார். பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அதை வருமான வரித்துறைக்கு ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

