கார்கில் போர் 25வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்

கார்கில் போர் 25வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே தேசிய சிந்தனை பேரவை சார்பில் கார்கில் போர் 25வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம்நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார், தேசிய சிந்தனைபேரவை தலைவர் திருநாவுக் கரசு ஆகியோர் கார்கில் வெற்றி விழா நினைவு ஜோதியை ஏற்றி வைத்தனர்.விழாவில் விஸ்வ இந்து பரிசத் மாவட்ட தலைவர் சபரிநாதன், பாஜக நிர்வாகிகள் ரமேஷ், பூங்குழலி, செங்கோட்டுவேல், தங்கவேல்,தேமுதிக நிர்வாகி ராஜேந்திரன், தேசிய சிந்தனை பேரவை குமரவேல், மனோகரன்,மற்றும் பாஜக தேசிய சிந்தனை பேரவை விஸ்வ இந்து பரிசத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கார்கில் வெற்றி விழா ஜோதியை பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் ஏற்றி வைத்தனர்
Next Story