வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினங்களை ஒட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினங்களை ஒட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
X
சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரி தகவல்
வார இறுதி நாட்கள், வளர்பிறை முகூர்த்த தினங்களை ஒட்டி சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் மார்ச் 3ஆம் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம் www.tnstc.in என்ற இணையதளம், அதன் செயலி வழியே முன்பதிவு செய்து அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால் நெரிசல் தவிர்த்து பயணிகள் பயணம் செய்யலாம் என சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story