ரூ 250 லட்சத்தில் கட்டிய மாநகராட்சி மண்டல அலுவலகத்தை கலந்து வைத்தார் செந்தில் பாலாஜி.
ரூ 250 லட்சத்தில் கட்டிய மாநகராட்சி மண்டல அலுவலகத்தை கலந்து வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சி நிர்வாக அலுவலகங்கள் மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் கரூர் மாநகராட்சி வார்டு எண் 2- பசுபதிபுரம் தெற்கு மடவிளாகம், நீர் தேக்க தொட்டி வளாகத்தில் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கரூர் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் எண் இரண்டு-ஐ முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை திறந்து வைத்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ,துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி உறுப்பினர்கள் , அரசுத்துறை அதிகாரிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் , திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மண்டல அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story




