மாவீரன் ஒண்டிவீரனின் 253 வது நினைவு நாள் அனுசரிப்பு
Dharapuram King 24x7 |21 Aug 2024 4:14 PM GMT
தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது
மாவீரன் ஒண்டிவீரனின் 253 வது நினைவு நாள் அனுசரிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் 253 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தாராபுரம் அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் உருவப்படத்திற்கு தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் அனுசரிக்கப்பட்டது, இந்நிகழ்வில் நகர செயலாளர் தண்டபாணி, மேற்கு மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த், வினோத் பொறுப்பாளர், லோகநாதன் ஒன்றிய இளம்புலிகள் அணி செயலாளர், ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் பாலகுமார், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து, நகர செயலாளர் செந்தில்குமார், நாகராஜ், லிங்கேஷ், பகவதி, பன்னீர்செல்வம், ரங்கசாமி, பவுல், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
Next Story