குரும்பபட்டி பிரிவு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
Karur King 24x7 |10 Sep 2024 11:04 AM GMT
குரும்பபட்டி பிரிவு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
குரும்பபட்டி பிரிவு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ராஜ சேர்வைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 9-ம் தேதி மதியம் 2 மணி அளவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குரும்பபட்டி பிரிவு அருகே சென்றபோது குரும்பபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த நகுலன் மகன் சக்திவேல் வயது 46 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், சக்திவேல் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் சுமார் 3800 மதிப்புள்ள 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பினையில் விடுவித்து, நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story