தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ இன்பர்மேசன் லிமிடேட் தங்களது  நிறுவனத்தில் காலியாக உள்ள ஹோம் சேல்ஸ் ஆபிஸர், ஜியோ பாயின்ட் அஸிஸ்டெண்ட மேனேஜர்,  டிஜிட்டல் ரிபைர் ஸ்பெஸலிஸ்ட், ப்ரி லான்சர் டெக்னீசியன் போன்ற 4000- த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை பூரத்தி செய்யவுள்ளது. இதில்  விருதுநகர்  மாவட்டத்திற்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்  பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-07-2024 அன்று விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  நடைபெறவுள்ளது.  விருப்பமுள்ள 10 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி கல்வித்தகுதி வரை பயின்ற 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.  மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in/   என்ற இணையதளத்தில்  தங்களது  சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் 26.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.   இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story