கரூர் மாவட்டத்தில் 26.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 26.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 26.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடக்கு, வடமேற்கிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் வெப்ப காற்று காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஏற்கனவே செய்து இருந்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில், நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 4- மில்லி மீட்டர், க.பரமத்தியில் 7.20 மில்லி மீட்டர், குளித்தலையில் 1.20 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 8-மில்லி மீட்டர், மாயனூரில் 6 மில்லி மீட்டர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 26.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதனுடைய சராசரி அளவு 2.23 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story