சி.ஐ.டி.யூ.,சாலை மறியல் நிர்வாகிகள் 27 பேர் கைது

சி.ஐ.டி.யூ.,சாலை மறியல் நிர்வாகிகள் 27 பேர் கைது
கைது
கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் 27 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்குதல், தொழிற்சங்கம் அமைக்க போராடிய தலைவர்கள், தொழிலாளர்களை கைது செய்வதையும், பொய் வழக்கு போடுவதையும் கண்டித்தல், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, காலை 11.45 மணியளவில் பஸ் வெளியே வரும் இடத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
Next Story