தஞ்சாவூரில், மே.27 இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

X
தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.05.2025 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

