தென்காசி மாவட்டத்தில் ஏப். 28-மே 27 ஆடுகளுக்கு தடுப்பூசி

தென்காசி மாவட்டத்தில் ஏப். 28-மே 27 ஆடுகளுக்கு தடுப்பூசி
X
ஏப். 28-மே 27 ஆடுகளுக்கு தடுப்பூசி
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ், ஆடுகளுக்கு இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஏப் 28ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயால் கால்நடைகளுக்கு 3 முதல் 5 நாள்கள் நீடிக்கும் காய்ச்சல், சோா்வு, தீனி உள்கொள்ளாமை, மூக்கிலிருந்து சளி வடிந்து உைல், கண்களில் புரை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீா் சுரத்தல், கழிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படுகிறது. இந்நோயினை தடுக்க 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய வெள்ளாடு மற்றும் செம்மறிஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம், நோய் எதிா்ப்பு சக்தியினை பெற இயலும். எனவே கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
Next Story