ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளருக்கு பழைய பஸ் நிலையம் நண்பர்கள் வாழ்த்து

ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளருக்கு பழைய பஸ் நிலையம் நண்பர்கள் வாழ்த்து

வாழ்த்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து வழக்கறிஞர்கள் கடந்த 25ஆம் தேதி போட்டியிட்டனர்.

இதில் செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர் பி.ரமேஷ் யுவராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வழக்கங்கள் சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்கள், மற்றும் சங்க நிர்வாகிகள் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் நண்பர்கள் குழு சார்பாக பி.ரமேஷ் யுவராஜா அவர்களின் அலுவலகத்தில் யோகா ஸ்டிக்கர்ஸ் உரிமையாளர் யோகராஜன் (எ) ராஜா தலைமையில் பாலகிருஷ்ணன் (எ) வினோத், கௌரிசங்கர், முகேஷ், பெருமாள், கார்த்திக், சாமுராஜ்(எ )சாமு, தமிழ்ச்செல்வன், வாட்டர் சங்கர், பீடா ஸ்டால் சங்கர், கிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story