தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் 29ம் தேதி எம்எல்ஏ அறிக்கை

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் 29ம் தேதி எம்எல்ஏ அறிக்கை
X
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறும் என எம்எல்ஏ தெரிவித்தார்
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி எம்எல்ஏவுமான எஸ் பழனி நாடார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் படி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளர், சண்டிகர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் லக்கி முன்னிலையில் வருகிற 29-11-2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், இந்நாள் - முன்னாள் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் - முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மற்றும் முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,வட்டார, நகர, பேரூர், கிராம கமிட்டி தலைவர்கள் மற்றும் தேசிய நெஞ்சங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என் தெரிவித்துள்ளார்
Next Story