ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் - ஆணையர் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் - ஆணையர் அறிவிப்பு

பெரம்பலூர் நகராட்சி 

பொம்பலூர் நகராட்சி சாலை ஓரங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற 3 நாள் அவகாசம் வழங்கி ஆணையர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சி ஆணையர் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில். பொம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக தங்கலால் வைத்துள்ள தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளை இவ்வறிவிப்பு கிடைக்கப்பட்ட மூன்று தினங்களுக்குள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை ஆகியோர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதுடன் தாங்கள் வைத்துள்ள பொருட்களை பறிமுதல் செய்ப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story