ஆட்டோ மீது மினி லாரி மோதல்: 3 பேர் படுகாயம்

X
செஞ்சி சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ரஞ்ஜித் 25; சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் இரவு (20 தேதி) 10 மணிக்கு சிறுகடம்பூரை சேர்ந்த நண்பர்கள் சேகர் மகன் அஜித்குமார், 25; ரவி மகன் ராம்குமார், 25; ஆகியோருடன் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோதியில் ஆட்டோவில் வந்த ரஞ்ஜித், அஜித்குமார், ராம்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் மூன்று பேரையும் செஞ்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

