பி.எஸ்.என்.எல்., டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

பி.எஸ்.என்.எல்., டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது
கைது
முகையூரில் பி.எஸ்.என்.எல்., டவர் பேட்டரிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார், மணம்பூண்டியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தை சோதனை செய்தனர். மேலும், வாகனத்தில் வந்த 3 பேரும், கடந்த 18ம் தேதி முகையூரில் பி.எஸ்.என்.எல்., டவர் அறையில் இருந்த 24 பேட்டரிகளை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்தது. உடன், சேமநாதபுரம் சீனுவாசன், 36; ஆனந்தராஜ், 28; தியாகதுருகம் ராஜசேகர், 32; ஆகிய 3 பேரையும் கைது செய்து, 24 பேட்டரிகள் மற்றும் தோஸ்த் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story