வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது

வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது
கைது
வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதியில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் - இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் எஸ்.ஒகையூர் பஸ்நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த சிலர் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது. உடன் போலீசார், புதுஉச்சிமேடு கணேசன், 44; வேப்பூர் அடுத்த ப.கொத்தனுார் பழனிவேல், 48; ஆகிய இருவரையும் கைது செய்து 15 ஆயிரத்து 560 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவரை தேடி வருகின்றனர். அதேபோல், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நடத்திய சோதனையில், கூத்தக்குடியைச் சேர்ந்த சொக்கலிங்கம், 55; என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, சொக்கலிங்கத்தை கைது செய்து, 520 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story