மூதாட்டியிடம் 3பவுன் தங்கச்செயினை பறித்துசென்ற முதியவர் கைது

மூதாட்டியிடம் 3பவுன் தங்கச்செயினை பறித்துசென்ற முதியவர் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் ஏமாற்றி 3 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற முதியவர் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருப்பத்தூரை சேர்ந்த மூதாட்டியிடம் நயமாக பேசி நூதன முறையில் ஏமாற்றி 3 பவுன் தங்க செயினை முதியவர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ASP.சிபின் உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம் சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் CCTV காவலர்கள் ஜான், செல்வி ஆகியோர் உதவியுடன் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட உடுமலைப்பேட்டையை சேர்ந்த அமானுல்லா(76) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story