பரப்பலாறு அணைப்பகுதியில் 3 யானைகள் உலா - மக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் 3 யானைகள் உலா - மக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பரப்பலாறு அணைப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனால் அணையின் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை யாரும் அச்சுறுத்தவோ விரட்டவோ கூடாது, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story