வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு

வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு
வேடசந்துாரில் 3வது நாளாக தொடர் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் - பழநி ரோட்டில் தனியார் சோப்பு கம்பெனி எதிரே டீ கடையில் துாங்கிய மூதாட்டியை 2 நாட்களுக்கு முன் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர் நகை பறித்து சென்றார். மறுநாள் அப்பகுதி விஸ்வகர்மா நகரில் கந்தசாமி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருடு போனது. வேடசந்துார் காந்தி நகரில் வசித்து வருபவர் சஞ்சய் கனி 45. இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றிருந்தார். அவரது வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. அவர் வந்த பிறகுதான் திருடு போன பொருட்கள் விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 3வது நாளாக நேற்றும் தொடர்ந்த திருட்டால் வேடசந்துார் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story