பட்டாக்கத்தியுடன் ரகளை 3 பேரை அள்ளியது போலீஸ்!

பட்டாக்கத்தியுடன் ரகளை 3 பேரை அள்ளியது போலீஸ்!
குற்றச்செய்திகள்
ஆலங்குடி: அரசடிப்பட்டி நால்ரோட்டில் மர்ம நபர்கள் சிலர் கையில் பட்டாக்கத்தியுடன் நின்றுக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக ஆலங்குடி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் மழவராயன் பட்டியை சேர்ந்த குமார்(29), பிலாபட்டியை சேர்ந்த விஜயகுமார் (22), உருமநாதபுரத்தை சேர்ந்த மணி கண்டன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story