வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாடும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கண்டெடுப்பு*

X
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாடும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கண்டெடுப்பு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,280-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் பணியின் போது பெண்கள் பாண்டி விளையாடும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், அகழாய்வில் முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது. அதேபோல பொழுதுபோக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளனர். அந்த வகையில் ஏராளமான சுடு மண் ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளது. மேலும் பெண் பாண்டி விளையாட பயன்படும் வட்ட சில்லுகள் அதிகளவில் அதிகளவில் கிடைத்துள்ளது அகழாய்வு ஆய்வின் மூலம் தெரிய வருகிறது என தெரிவித்தார்.
Next Story

