விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு*.

விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு*.
X
விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு*.
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,360-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் பணியின் போது அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், சங்கின் மேற்பகுதி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி 'சங்கு வளையல்கள், அணிகலன்கள், கண்ணாடி மணிகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. முன்னோர்கள் அலங்காரத்திற்கும் அழகுகிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது அகழாய்வு ஆய்வு மூலம் தெரிய வருகிறது என தெரிவித்தார்.
Next Story