குன்றத்துார் முருகன் கோவிலில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்

குன்றத்துார் முருகன் கோவிலில் 3 ஜோடிக்கு இலவச திருமணம்
X
குன்றத்துார் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களில், ஏழை, எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதனுடன், 4 கிராம் தங்க நகை மற்றும் கட்டில், பீரோ, மெத்தை, வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்படுகின்றன.அந்த வகையில், குன்றத்துார் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்கம், 60,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story