சேலம் தாதகாப்பட்டியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் சிக்கினர்

X
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தாதகாப்பட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சண்முக நகர் அய்யனார் பாறைகாடு காளியம்மன் கோவில் அருகே நின்று இருந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் போதை பொருட்கள் வைத்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள், சண்முக நகரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20), தாதகாப்பட்டி கோபாலகிருஷ்ணன் (23), நாகராஜ் (20) ஆகியோர் என்பதும், போதை மாத்திரைகள் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 50 போதை மாத்திரைகள், சிரஞ்சு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

