கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது
X
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் நேசமணி காவல் நிலைய போலீசாருக்கு கோணம் பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்,அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் அவர்கள் கோட்டார் பகுதியை சேர்ந்த முருகன்(47), கரியமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் (27), குழிக்கோடு பகுதியை சேர்த்த அருண்(23) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை மேற்கொண்ட போது அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட மூன்று கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story