சேலம் அன்னதானப்பட்டியில் வக்கீலிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது

சேலம் அன்னதானப்பட்டியில் வக்கீலிடம் செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). வக்கீல். சம்பவத்தன்று இவர் அன்னதானப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவரிடமிருந்து செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து மணிகண்டன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் செல்போன் திருடியது 17, 18 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story