அமெரிக்காவில் 3 தங்கங்கள் வென்ற பெண் போலீஸ்

அமெரிக்காவில் 3  தங்கங்கள் வென்ற பெண் போலீஸ்
X
எஸ் பி பாராட்டு
காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை நடத்திய உலக அளவிலான தடகள போட்டியானது கடந்த 27.06.2025 முதல் 06.07.2025தேதி வரை அமெரிக்காவில் அலபாமாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் மற்றும் 100மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் சாதனை படைத்த தலைமை காவலர் கிருஷ்ணரேகா வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
Next Story