வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின் உற்பத்தி: மின் வாரியம்

வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின் உற்பத்தி: மின் வாரியம்
X
வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்​டம்​பரில் முழு​திறனில் மின் உற்​பத்தி செய்​யப்​படும் என மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.
ரூ.10,158 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட வடசென்னை அனல் மின்​நிலை​யத்​தின் 3-வது அலகு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்​தில்​தான் சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்டு மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டது. 800 மெகா​வாட் திறன் கொண்ட 3-வது அலகில் தற்​போது சோதனை ஓட்​ட​மாக 620 மெகா​வாட் மட்​டுமே உற்​பத்தி இருக்​கிறது. மேலும், அவ்​வப்​போது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்டு மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது நிலை​யான உற்​பத்தி மேற்​கொள்​ளப்​படு​வ​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர். இருப்​பினும் வணிக ரீதி​யான உற்​பத்தி இன்​னும் தொடங்​கப்​பட​வில்​லை. வணிகரீதி​யான உற்​பத்தி என்​றால் மின் நிலை​யத்தை முழு​திறனில் 72 மணி நேரம் தொடர்ந்து இயக்க வேண்​டும். இதை பூர்த்தி செய்​தால்​தான் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை விற்க முடியும். இந்​நிலை​யில். அடுத்த மாதம் முதல் முழு திறனில் மின் உற்​பத்தி செய்​யப்​படும் என மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்துள்​ளனர்.
Next Story