ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை பலி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாரலப்பள்ளி பகுதியை சோ்ந்த மணி லாரி டிரைவர் இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடிய போது அந்த பகுதியில் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் விழுந்து மூழ்கியது. அங்கிருந்தவா்கள் குழந்தையை மீட்டு சாமல்பட்டி மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

