போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்கள் கைது

போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்கள் கைது
X
திண்டுக்கல்லில் போலீசாரின் வாகன சோதனையின் போது போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 இளைஞர்கள் கைது
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் முத்தழகுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தியபோது தப்பிச்செல்ல முயற்சி செய்தனர் போலீசார் பிடிக்க முயற்சி செய்தபோது போலீசாரிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(27), ருத்தீஸ்குமார்(21), சக்திவேல்(32) என்பது தெரிய வந்ததை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பைக் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story