முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை: 3 பேர் கைது!

முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை: 3 பேர் கைது!
X
சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் சந்திராயபுரத்தைச் சேர்ந்த ஏசுராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். கடந்த 24ஆம் தேதி கைப்பேசியில் பேசியபோது இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ரெக்சன் தரப்பினர் ஏசுராஜாவை முதலூருக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து, அவர் பழனியப்பபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்த் (25) உள்ளிட்ட 3 பேருடன் இரவில் அங்கு சென்றபோது, ரெக்சன், முதலூரைச் சேர்ந்த பவுல் மகன் சங்கரவேல் (24), தானியல் (24) ஆகிய 3 பேர் இருந்தனர். போதையிலிருந்த இவர்கள் ஒருவரையொருவர் தாக்கியதில் ஆனந்த் காயமடைந்தார்.  தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர், அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் வழக்குப் பதிந்து, ரெக்சன், சங்கரவேல், தானியல் ஆகிய 3 பேரையும் தேடிவந்தார். இந்நிலையில், அப்பகுதியில் பதுக்கியிருந்த அவர்கள் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story