போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் - ரூ. 3கோடியே 36 இலட்சம் மதிப்பிலான 35 பணிகளை துவக்கி வைத்தார்.

போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்  சா.சி.சிவசங்கர் - ரூ. 3கோடியே 36 இலட்சம் மதிப்பிலான 35 பணிகளை துவக்கி வைத்தார்.
X
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் - ரூ. 3கோடியே 36 இலட்சம் மதிப்பிலான 35 பணிகளை துவக்கி வைத்தார்.
அரியலூர், ஜூன்.25- அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.54.83 இலட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் 3 கோடியே 36 இலட்சம் மதிப்பிலான 35 பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.54.83 இலட்சம் மதிப்பீட்டில் 04 முடிவுற்ற திட்டப்பணிகளும், ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.3.36 கோடி மதிப்பீட்டிலான பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி செந்துறை ஊராட்சி ஒன்றியம், நமங்குணம் ஊராட்சியில் ரூ.63.41 இலட்சம் மதிப்பீட்டில் நமங்குணம் முதல் பழமலைநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து, பழமலைநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியையும், பின்னர், ந.பாலையூர் நடுத்தெருவில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து ந.குடிகாடு பொது இடுகாட்டில் ரூ.4.36 இலட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை அமைக்கும் பணியையும், பின்னர், ந.குடிகாடு எம்.ஜி.ஆர் நகரில் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து, நமங்குணம் ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், நமங்குணம் திருவள்ளுவர் நகரில் 1996 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை மாற்றி ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியையும், தொடர்ந்து, நமங்குணம் ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பின்னர், நமங்குணம் ஊராட்சியில் ரூ.23.13 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பால் கூட்டுறவு சங்க கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, நமங்குணம் ஊராட்சியில் ரூ.11.79 இலட்சம் மதிப்பீட்டில் நமங்குணம் மெயின்ரோடு முதல் குடிகாடு மெயின்ரோடு வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து சொக்கநாதபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கல்வெர்ட் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார். பின்னர், சொக்கநாதபுரம் கிராமத்தில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, நக்கம்பாடி ஊராட்சியில் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், நிண்ணியூர் கிராமத்தில் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.1.55 இலட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து நக்கம்பாடி ஊராட்சியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், நக்கம்பாடி ஊராட்சியில் ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், நிண்ணியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து நிண்ணியூர் கிராமத்தில் ரூ.14.10 இலட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி புனரமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சியில் ரூ.2.48 இலட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குளம் புனரமைக்கும் பணியையும் மற்றும் ரூ.1.33 இலட்சம் மதிப்பீட்டில் சுப்புராய படையாட்சி ஏரி புனரமைக்கும் பணியையும், பின்னர், கட்டையன்குடிகாடு கிராமத்தில் ரூ.2.35 இலட்சம் மதிப்பீட்டில் நாராயண கோனார் ஏரி புனரமைக்கும் பணியையும் மற்றும் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் குடி தண்ணீர் குளம் புனரமைக்கும் பணியையும், தொடர்ந்து, செந்துறை ஊராட்சியில் ரூ.2.60 இலட்சம் மதிப்பீட்டில் செம்படவன் குளம் புனரமைக்கும் பணியையும், ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் செந்துறை கைலாககுளம் புனரமைக்கும் பணியையும் மற்றும் ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டில் செந்துறை அருணாச்சல பிள்ளை ஏரி புனரமைக்கும் பணியையும், பின்னர், செந்துறை ஊராட்சியில் ரூ.8.80 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து செந்துறை ஊராட்சியில் ரூ.4.02 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், செந்துறை ஊராட்சியில் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணியையும் துவக்கி வைத்து பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, பொன்பரப்பி ஊராட்சியில் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ.12.40 இலட்சம் மதிப்பீட்டில் பொன்பரப்பி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், தொடர்ந்து, பொன்பரப்பி ஊராட்சியில் ரூ.4.35 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.2.61 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியையும், பின்னர், பொன்பரப்பி குடிகாடு கிராமத்தில் ரூ.69.38 இலட்சம் மதிப்பீட்டில் அய்யனார்குளம் முதல் பொன்பரப்பி குடிகாடு வரை சாலை மேம்படுத்தும் பணியையும் என மொத்தம் 3 கோடியே 36 இலட்சம் மதிப்பிலான 04 முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் 31 புதிய பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். ந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் திர உமா மகேஸ்வரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .பழனிசாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ரவி மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story