குமரி : ரூ. 3. 65 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

குமரி : ரூ. 3. 65 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
X
சங்கம் பெயரில்
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி அன்னலட்சுமி (49). இவர் 16 பெண்களைக் கொண்ட  சங்கத்தை ஊரில் நடத்தி வந்தார். சங்கத்துக்கு அன்னலட்சுமி தலைவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கசுகிதா அவரது கணவர் ராமச்சந்திரன் ஆகியோர் சங்கத்திலிருந்து ரூ.12,500 கடனாக பெற்றனர். பின்னர் அவர்கள் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.        இதை அடுத்து தம்பதியினர் சங்கத்தின் தலைவி அன்னலட்சுமி  பெயரைக் கூறி வங்கி மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களில் இருந்து ரூபாய் 3 லட்சத்து 65 ஆயிரத்து 700  பெற்றுள்ளனர். இதனை அறிந்த அன்னலட்சுமி தம்பதியிடம் இது குறித்து கேட்டுள்ளார். மேலும் வாங்கிய கடனை திருப்பித் தருமாறு கூறினார்.        இதனால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன், தங்க சுகிதா ஆகியோர் அன்னலட்சுமியை  தகாத வார்த்தைகளால்  திட்டியதுடன் பணம் கேட்டு வந்தால் கொலை செய்துள்ளதாக மிரட்டி உள்ளார்.  அன்னலட்சுமி இது தொடர்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்த ராமச்சந்திரன், தங்க சுசிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story