சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது
X
சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அருப்புக்கோட்டையில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து வழங்கிய சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த இந்த கோவிலுக்கு வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும், கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும், கோவில்களில் யானைகள் பக்தர்களை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் மேலும் அதே நேரத்தில் பக்தியை வளர்க்கும் விதமாகவும் நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா இணைந்து அன்பளிப்பாக ரூபாய் 6 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கஜா என்ற இயந்திர யானை வழங்கப்பட்டுள்ளது. இந்த யானை கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ளது சுமார் 3 மீட்டர் உயரமும் 800 எடை வடிவமைப்பில் பிரம்மாண்டமாக இந்த யானை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானை சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையிலும் தன் காதுகள், துதிக்கைகள், தலை அனைத்தும் அசையும் வகையில் தத்ரூபமாக உண்மையான யானை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை பக்தர்கள் மீது தண்ணீரை பீச்சி அடிக்கும் வகையிலும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானை அறிமுக விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மங்கள வாத்தியம் செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்ற இந்த அறிமுக பல நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் கலந்து கொண்டு புதிய யானையை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் இணைந்து மலர் தூவி இந்த பிரம்மாண்ட யானையை வரவேற்றனர். இந்த இயந்திர யானைக்கு தீபாரதனையும் நடைபெற்றது. இந்த யானை பார்ப்பதற்கு பொதுமக்களை கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தங்கள் கண்கள் காதுகள் அனைத்தும் தத்ரூபமாக யானை போன்றே உள்ளது. இந்த அறிமுகமான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பரத நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வனவிலங்குகளான யானைகளை துன்புறுத்தாமல் தமிழகத்திலேயே முதன்முறையாக இது போன்று இயந்திரத்தால் ஆன யானை அருப்புக்கோட்டையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.‌
Next Story