ஆலைக்கு பதிவு செய்ய 30-ம் தேதி கடைசி நாள் - ஆட்சியர் தகவல்!

ஆலைக்கு பதிவு செய்ய 30-ம் தேதி கடைசி நாள் - ஆட்சியர் தகவல்!

மாவட்ட ஆட்சியர் 

திருவண்ணாமலையில் ஆலைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தி.மலை விவகார எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் விவகார எல்லை பகுதிகளில் 2024-25 ஆண்டிற்கான கரும்பு சாகுபடி செய்ய ,இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story