போக்ஸோ குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

X
குமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாகுமரி புத்தளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் குமார் (50) மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் குற்ற எண் 04/2018, U/S 3, 4, 5(n), 5(m), 6 of POCSO Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள். நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Next Story

