தமிழகத்தில் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது.

நடப்பு ஆண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாணவர்கள் விளையாடாததால் பல்வேறு கெட்ட பழக்கத்திற்கு ஆளாகின்றனர் நாமக்கல்லில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெரியதுரை பேட்டி அளித்தார்.தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மாநில தலைவர் தேவி செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரியதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் : தமிழ்நாடு அரசு உடற்கல்விக்கான பாடபுத்தகங்களை துணை முதலமைச்சர் வெளியிட்டார் அந்த புத்தகங்களை இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் மேலும் தமிழகத்தில் 37 ஆயிரம் அரசு பள்ளிகளில் 6520 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் மட்டுமே உள்ளது, 31 ஆயிரம் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களே இல்லை, அதேப்போல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடமில்லை எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை என்றும் 1998 ல் நியமனம் பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 22 ஆயிரம் தொடக்கப் பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் கூட கிடையாது மேலும் 9 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளில் 40 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர்.உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் 7 ஆயிரம் பள்ளிகளில் 6500 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதே இல்லை என்றும் மாணவர்கள் விளையாடாததால் பல்வேறு கெட்ட பழக்கத்திற்கு ஆளாகின்றனர். சீனாவில் 8 வயதிலேயே மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லி கொடுக்கப்பட்டு ஒலிம்பிக் பேட்டிகளுக்கு அனுப்ப படுகின்றனர் என அவர் பேட்டி அளித்தார்
Next Story