பெரியகசினாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரியகசினாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
பெரிய கசினாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கசினாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகசி நாயக்கண்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார் பின்னர் 319 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் பள்ளி மேலாண்மை குழு கலையரசி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது
Next Story