தாய் மகள் தற்கொலை

தாய் மகள் தற்கொலை
சிவகாசி அருகே கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்... தாயும்,மகளும் தூக்கிட்டு தற்கொலை...
விருதுநகர் மாவட்டம், மாரனேரி பகுதியில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாய்,அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அருகே மாரனேரி அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(41). இவரது மனைவி பாப்புகுட்டி(41). இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா(17),8ம் வகுப்பு படிக்கும் இந்துமதி(13) என்ற இரு மகள்களும்,4ம் வகுப்பு படிக்கும் அருண் குமரன்(10) என்ற மகனும் உள்ளனர்.இந்துமதி கடந்த இரு நாட்களாக பள்ளிக்குச் செல்லாததால்,அவரை தாய் பாப்புக்குட்டி கண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியல் இருந்த இந்துமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட பாப்புகுட்டி, தனது கணவர் பாலமுருகனுக்கு போன் செய்து,இந்துமதி தற்கொலை செய்து கொண்டதை கூறிவிட்டு, நானும் உயிரோடு இருக்க மாட்டேன் எனக்கூறி போனை கட் செய்துவிட்டார்.

பாலமுருகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, தாய், மகளும் இருவரும் வீட்டில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில்,உறவினர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டன தெரிவித்தனர்.இதுகுறித்து மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story