அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல்

கடலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் அதிமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடும் வெயிலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தொரப்பாடி பேரூராட்சியில் ஏழு வகையான பழ வகைகளுடன் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டதை முன்னாள் அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார். இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்‌ மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story