சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 கிலோ அளவிலான வெடி மருந்து மூலப் பொருட்கள் அழிக்கப்பட்டது

சட்டவிரோதமாக பட்டாசு  உற்பத்தி செய்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 கிலோ அளவிலான வெடி மருந்து மூலப் பொருட்கள் அழிக்கப்பட்டது
சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 கிலோ அளவிலான வெடி மருந்து மூலப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலமாக இன்று அழிக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரு வேறு இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 கிலோ அளவிலான வெடி மருந்து மூலப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலமாக இன்று அழிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மற்றும் திருத்தங்கள் குறுக்குப்பாதை பகுதியில் தலித் ராஜா ஆகியோர் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.இந்த நிலையில் மேலும் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து மூலப்பொருட்களை பாதுகாப்பாக அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று சிவகாசி செங்கமலபட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் மதுரையில் இருந்து வந்திருந்த வெடிபொருள் நிபுணர் ராமசாமி முன்னிலையில் வெடி மருந்து பொருட்கள் அழிக்கப்பட்டன.
Next Story