நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறப்பு

நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

விருதுநகரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கழகம் மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் வெயில் தாக்கத்தில் இருந்து காக்கும் விதமாக நீர் மோர் பந்தலை விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், சர்பத், இளநீர், தண்ணீர் பழம், நுங்கு, பானக்கரம், போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் புதுப்பட்டி விளக்கு பகுதியில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திரபாலாஜி சாமி வழிபாடு செய்தார். மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், பேரூராட்சி செயலாளர் அன்பு துரை. மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜ்குமார், நகரச் செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், ஒன்றிய செயலாளர் அழகாபுரியான், குருசாமி, நவரத்தினம், மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story