கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று 36 நாட்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து  பாசனத்திற்காக இன்று 36 நாட்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்..
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று 36 நாட்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்..
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று 36 நாட்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர்.. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு குன்றி, விளாங்கோம்பை மல்லிய துர்கம். கடம்பூர் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர் , காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படும், குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிபுத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர். இன்று முதல் நவம்பர் 4 ஆம்; தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் வலது கரையில் 8 கன அடி தண்ணீரும் இடது கரையில் 16 கன அடி தண்ணீரும், 46 நாட்களில் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டு மொத்தம் 36 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story