ஜெயங்கொண்டத்தில் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிப்பு.

ஜெயங்கொண்டத்தில் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிப்பு.
X
ஜெயங்கொண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர், டிச.24 - ஜெயங்கொண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவை தலைவருமான ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் அதிமுகவினர் காந்தி பூங்காவில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக அமைதி ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக நகர  செயலாளர் பி.ஆர்.செல்வராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாநில எம் ஜி ஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் ஜெ.கொ.சிவா, மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் விக்கிரமபாண்டியன்   மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story