ஆரணி அருகே டாஸ்மாக் சூபர்வைசரின் தலையை பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3.72 லட்சம் கொள்ளை.

ஆரணி அருகே டாஸ்மாக் சூபர்வைசரின் தலையை பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3.72 லட்சம்  கொள்ளை.
ஆரணி, செப் 22. ஆரணி அருகே பையூரில் வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் சூபர்வைசர் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது சூபர்வைசரின் தலையில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3.72 லட்சம் கொள்ளையடித்துச்சென்றனர்
ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன்(50) என்பவர் எஸ்.வி. நகரம், பழங்காமூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சூப்பர்வைசராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் புருஷோத்தமன் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையில் மது விற்பனை கணக்குகளை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். இரண்டு கடைகளில் இருந்து மொத்தம் 3.70 லட்சம் வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டு சென்று கொண்டிருந்தபோது பையூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே சென்றுகொண்டிரு்தார். அப்போது மூன்று மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்றவர்கள் அவர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சூபர்வைசர் தலையில் ஓங்கி அடித்தனர். இதனால் தலையில் பலத்த காயமடைந்து பைக் உடன் கீழே விழுந்தார். மேலும் அவர் கையில் வைத்திருந்த பணப்பையை பிடுங்க முயற்சித்தனர். பணப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததால் உடைந்த பீர் பாட்டிலை எடுத்து அவர் முகம் மற்றும் உடலில் குத்தி கிழித்தனர். பின்னர் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் ரத்த வெள்ளத்தில் புருஷோத்தமன் மயங்கி விழுந்தார். இது குறித்த பகுதி மக்கள் ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிராமிய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூபர்வைசரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சேர்த்தனர். மேலும் புருஷோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.
Next Story