பாமக சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு விருப்பமான மனு

பாமக சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு விருப்பமான மனு
நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் குமாரபாளையம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளின்செயலாளர் , தலைவர், மகளிர் செயலாளர், தலைவர், நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மன்றத்தில் நடைபெற்றது நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா முன்னாள் மத்திய அமைச்சர் சண்முகம், மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கீர்த்தி, மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி,நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், திருச்செங்கோடு நகர செயலாளர் சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர மகளிர் பொறுப்புகளுக்கு வர விரும்பியவர்கள் தங்களது விருப்பமனுக்களை வழங்கினார்கள். பின்னர் அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்களுடைய தொழில், கட்சியில் வகித்த பொறுப்புகள், கட்சியின் போராட்டங்களில் பங்கு கொண்ட நிலை ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து கட்சியின் தலைமைக்கு இவர்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு பொறுப்புகள் அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story